பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்

பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள் . இந்த சந்திப்பானது இன்று மதியம் 1.23 மணி முதல் 2.36 மணிவரை நடைப்பெற்றது.

இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து பேசியிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து சசிகலா பொதுச் செயலாளரானது செல்லாது என்ற புகாரில் தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு ஏதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் , அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா தன்னை தமிழக சிறைக்கு மாற்றம் செய்யுமாறு தொடர்ந்து தன்னை சிறையில் சந்திக்க வருபவர்களிடம் கூறிவருவதாக கூறப்பட்டுகிறது. அமைச்சர்களுடனான் இந்த சந்திப்பின் போது, சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றும் பணிகளுக்கான நடைமுறைகளை செய்து வருகிறோம். 90 நாட்களுக்கு பிறகு ஒருவரை தற்போது உள்ள சிறையில் இருந்து மற்ற சிறைக்கு மாற்ற முடியும் என்பதால் 90 நாட்கள் பொறுமை காக்குமாறு சசிகலாவிடம் அமைச்சர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.